Posts

நாடாளுமன்றத் தேர்தல் - 2

பகுதி – 2      நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட் டு தமிழ் நாட்டில் 40 எம் . பிக்கள் என மொத்த இந்தியாவில் 545 எம் . பிக்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள் எனப் பார்த்தோம் . எதற்காகச் செல்கிறார்கள் ? நமது பிரதிநிதியாக மாநிலங்களின் குரலை அங்கு பிரதிபலிக்க , மக்களுக்கு , மாநிலத்திற்கு, நாட்டிற்குத் தேவையான சட்ட திட்டங்களை வகுக்க , செயல்படுத்தவே செல்கிறார்கள் . இந்திய அரசியலமைப்பு மாநிலத்தை நிர்வகிக்கும் மாநில அரசுக்கு என்னென்ன அதிகாரம், நாட்டினை நிர்வகிக்கும் ஒன்றிய அரசுக்கு என்னென்ன அதிகாரம், இரு அரசுகளுக்குமான பொது அதிகாரங்கள் என்னென்ன என வகைப்படுத்தி உள்ளது. யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது எனத்தெரிந்து கொண்டால் தான் நம் பிரச்சனைகள் , நம் தேவைகளுக்கு ஏற்றபடி நம்மால் மாநில, மத்திய அரசுகளை தேர்ந்தெடுக்க முடியும் .       மாநில அரசுக்கான அதிகாரங்கள் மாநிலப்பட்டியலில் அடங்கும் , மத்திய அரசுக்கான அதிகாரங்கள் ஒன்றிய ப்பட்டியலில் இருக்கும் . இருவரும் சேர்ந்து முடிவெடுப்பவை பொதுப்பட்டியலில் இருக்கும் . அதாவது ப...

நாடாளுமன்றத் தேர்தல் - 1

பகுதி – 1 வரும் ஏப்ரல் 18 இந்தியப் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது . நாடாளுமன்றம் என்றால் என்ன ? அதன் வேலைகள் என்ன ? எம்பிக்கள் எனப்படும் அதன் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்வு செய்யப் படுகிறார்கள் ? அவர்களை எதற்காகத் தேர்வு செய்கிறோம் ? அவர்கள் என்ன செய்வார்கள் ? என புதிய வாக்காளர்களுக்கு பல கேள்விகள் இருக்கும் . நாடாளுமன்றம் , அதன் தேர்தல் குறித்து இனி தெரிந்து கொள்ளலாம் . நாற்பதும் நமதே எனக் கட்சிகள் முழக்கமிடுவதை கேட்டிருப்போம் . அந்த 40 என்னவெனில் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள் . இந்த 40 தொகுதிகளுக்கே வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் . அத்தேர்தல் எம் . பிக்கள் எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் . இந்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெரும் வேட்பாளர்கள் மக்களவை உறுப்பினர்கள் ) எனப்படுவர் . இதே போல எல்லா மாநிலங்களிலும் இருக்கும் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் 20 தொகுதிகள் . கர்நாடகாவில் 28 தொகுதிகள் . எல்லா மாநிலங்களிலும...

வரலாறு அறிவோம் – 4

Image
வரலாறு அறிவோம் – 4 வேளிர் சங்க கால அகழாய்வு தொடக்க நிலையிலேயே உள்ளது . முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே வேளிர் வரலாற்றுக்கும் பெருங்கற்சின்னங்களுக்கும் இடையில் உள்ள தொடர்பினை இன்னும் தெளிவாக அறிய முடியும் . இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள் , அகழ்வு சான்றுகள் , சங்க இலக்கியங்கள் ஆகியவற்றை வைத்து வேளிர் குறித்து அறிந்து கொள்ளலாம் . சங்க காலத்துக்கு முன்னரே வேளிர் உருவாகி விட்டனர் . வேளிர் எழுச்சிக்கும் வணிக வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு . கால்நடைகள் செல்வமாக கருதப்பட்டது . எனவே ஆகோள் பூசல் தொடர்ந்து நடைபெற்றது . அதில் வென்றவர் முதலில் வேளாக ஏற்கப்பட்டு பின் காலப்போக்கில் அமைதிக் காலங்களிலும் வேளாகவே நிலை பெற்று இருக்கலாம் . ஒவ்வொரு தொல்குடிக்கும் ஒரு வேள் இருந்திருக்க வேண்டும் .   வேளிர் என்ற சொல் வெள் , வெளிச்சம் ஆகியவற்றில் இருந்து உருவான சொல் என அரங்கசாமி அவர்கள் கூறுவார் . வெள்ளை , வெண்மை , வெள்ளி என்ற சொற்கள் வெண்மை நிறம் அல்லது ’ ஒளியுடைய ’ என்ற பொருள் தரும் வெள் என்ற அட...

வரலாறு அறிவோம் - 3

வரலாறு அறிவோம் - 3 தொல் எழுத்து ஆய்வின் வரலாறு நம் நாட்டின் தொல்லியல் வரலாறு குறித்த ஆய்வினை தொடங்கி வைத்து, தொடர்ந்து பல கல்வெட்டுக்களை ஆராய்ந்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களுடன் இணைந்து இந்திய அறிஞர்களும் பணியாற்றினர். இந்தியாவில் கல்கத்தா கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ், உச்ச நீதிமன்ற நீதிபதி சர் வில்லியம் ஜோன்ஸ் ஆகியோரால் 1783 ஜனவரி 15 ஆம் நாள் வங்காள ஆசியவியல் கழகம் நிறுவப் பட்டது. இக்கழகம் ஏசியாட்டிக் ரிசர்ச்சஸ் என்ற ஆய்விதழை வெளியிட்டது. இதுவே இந்திய வரலாற்றைப் பற்றிய அறிவு வளர்ச்சியில் முதல் ஆய்வு நூல். ஜோசப் பிரின்சப், ஜார்ஜ் பியூலர், ஓஜா ஆகியோர் இந்திய எழுத்து வரி வடிவ வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியின் முன்னோடிகள் ஆவர். இன்னும் பலரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏ. சி. பர்னல், டி. ஏ. கோபி நாதராவ், கே.வி. சுப்ரமணிய ஐயர், தி. ந. ராமச்சந்திரன், எஸ். எச். ரித்தி, ஐராவதம் மகாதேவன், டி. வி. மகாலிங்கம், இரா. நாகசாமி, கே.ஜி. கிருஷ்ணன், நடன. காசிநாதன், எ. சுப்புராயலு, புலவர் செ. இராசு, என். சேதுராமன் ஆகியோர் தென்னிந்திய குறிப்பாக தமிழ்நாட்டு எழுத்து வளர்ச்சி பற்றி ஆய்வு ...

வரலாறு அறிவோம் - 2

Image
வரலாறு அறிவோம் - 2 தொல் தமிழ் தமிழ் மொழியின் எழுத்து வடிவம் இப்போது இருப்பதைப் போல் முற்காலத்தில் இல்லை. தற்காலத் தமிழ் எழுத்துக்களின் எளிய வடிவமாகக் கல்லில் எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக எழுத்துக்கள் உருவாகின. இத்தொல் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் அப்போதைய ஆய்வாளர்கள் தமிழ் பிராமி எனத் தவறாகப் பெயரிட்டு விட்டனர். பின்னர் வந்த ஆய்வாளர்கள் இதனைத் தொல் தமிழ், பண்டைய தமிழ், தமிழி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். நாமும் தொல் தமிழ் என்றே அழைக்கலாம். தொல் தமிழ் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் குறியீடுகள் புழக்கத்தில் இருந்தது. பின்னரே எழுத்துக்கள் உருவாயின. குறியீடுகள் குறித்து அடுத்ததடுத்த பதிவுகளில் பார்ப்போம். தொல் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப் பட்ட காலம் என ஆய்வாளர்கள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்ட காலம் பொ.யு.மு 500 முதல் பொ. யு. 300 வரை. பொருந்தல் என்ற இடத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்புடன் உள்ள பானை ஓட்டின் காலம் பொ. யு. மு 500 என கணிக்கப் பட்டுள்ளது. எனவே தொல் தமிழ் அதற்கு முன்னதாக உருவானதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் இன்னும் பெரிய பரப்பளவுகளில் ஆய...

வரலாறு அறிவோம் - 1

வரலாறு அறிவோம் - 1 தொல்குடி குடிகள் குறித்த சான்றுகளை பெரும் கற்சின்னங்கள் மூலம் அறிகிறோம். சங்க இலக்கியங்கள் மூலமும் அறிகிறோம். குடி என்பதற்கு இல், திணை, குலம் ஆகியவை இணையான சொற்கள். சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் குறிப்பிட்ட இரத்த உறவுகளை (பங்காளிகளை) குறித்தது. காலப்போக்கில் குடிகள் தங்கி இருந்த இடத்தை குறித்தது. சிறு சிறு குடிகளாக இருந்தவர்கள் ஆரம்ப காலங்களில் ஓரிடத்தில் தங்காமல் நாடோடியாகத் திரிந்து பின்னர் நிலையான இடங்களில் வாழத் தொடங்கினர். உணவு, உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடத் தொடங்கினர். இரும்பை உருக்கி கருவிகள் செய்தனர். கலப்பை பயன்பாடு, தொழில் நுட்பங்கள் அறிமுகமாகின்றன. ஏரி, குளம் உருவாக்கம் பெறுகிறது. உணவு உற்பத்தி, கால்நடைகள் பெருக்கம், கருவிகள் உற்பத்தி அதிகரிக்கவும் பண்டமாற்று முறை உருவாகிறது. குடிக்குள்ளே ஆரம்பித்து பின்னர் வெவ்வேறு குடிகளுக்கிடையே பரிமாற்றம் தொடங்குகிறது. முதலில் வளங்களை பாதுகாப்பதன் மூலம் தலைவர்களாக ஆயினர். பின்னர் புதிய வளங்களை கைக் கொள்வதில் பூசலில் ஈடுபடத் தொடங்கினர். இதனாலேயே குறிப்பிட்ட காலம் வரை பூசலில் ஈடுபட வீரர்கள் வைக்கப் ...