Posts

Showing posts from March, 2018

வரலாறு அறிவோம் - 3

வரலாறு அறிவோம் - 3 தொல் எழுத்து ஆய்வின் வரலாறு நம் நாட்டின் தொல்லியல் வரலாறு குறித்த ஆய்வினை தொடங்கி வைத்து, தொடர்ந்து பல கல்வெட்டுக்களை ஆராய்ந்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்களே. அவர்களுடன் இணைந்து இந்திய அறிஞர்களும் பணியாற்றினர். இந்தியாவில் கல்கத்தா கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ், உச்ச நீதிமன்ற நீதிபதி சர் வில்லியம் ஜோன்ஸ் ஆகியோரால் 1783 ஜனவரி 15 ஆம் நாள் வங்காள ஆசியவியல் கழகம் நிறுவப் பட்டது. இக்கழகம் ஏசியாட்டிக் ரிசர்ச்சஸ் என்ற ஆய்விதழை வெளியிட்டது. இதுவே இந்திய வரலாற்றைப் பற்றிய அறிவு வளர்ச்சியில் முதல் ஆய்வு நூல். ஜோசப் பிரின்சப், ஜார்ஜ் பியூலர், ஓஜா ஆகியோர் இந்திய எழுத்து வரி வடிவ வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சியின் முன்னோடிகள் ஆவர். இன்னும் பலரும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏ. சி. பர்னல், டி. ஏ. கோபி நாதராவ், கே.வி. சுப்ரமணிய ஐயர், தி. ந. ராமச்சந்திரன், எஸ். எச். ரித்தி, ஐராவதம் மகாதேவன், டி. வி. மகாலிங்கம், இரா. நாகசாமி, கே.ஜி. கிருஷ்ணன், நடன. காசிநாதன், எ. சுப்புராயலு, புலவர் செ. இராசு, என். சேதுராமன் ஆகியோர் தென்னிந்திய குறிப்பாக தமிழ்நாட்டு எழுத்து வளர்ச்சி பற்றி ஆய்வு ...

வரலாறு அறிவோம் - 2

Image
வரலாறு அறிவோம் - 2 தொல் தமிழ் தமிழ் மொழியின் எழுத்து வடிவம் இப்போது இருப்பதைப் போல் முற்காலத்தில் இல்லை. தற்காலத் தமிழ் எழுத்துக்களின் எளிய வடிவமாகக் கல்லில் எழுதுவதற்கு ஏற்ற வடிவமாக எழுத்துக்கள் உருவாகின. இத்தொல் தமிழ் எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட புதிதில் அப்போதைய ஆய்வாளர்கள் தமிழ் பிராமி எனத் தவறாகப் பெயரிட்டு விட்டனர். பின்னர் வந்த ஆய்வாளர்கள் இதனைத் தொல் தமிழ், பண்டைய தமிழ், தமிழி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். நாமும் தொல் தமிழ் என்றே அழைக்கலாம். தொல் தமிழ் எழுத்துக்கள் உருவாவதற்கு முன்னர் குறியீடுகள் புழக்கத்தில் இருந்தது. பின்னரே எழுத்துக்கள் உருவாயின. குறியீடுகள் குறித்து அடுத்ததடுத்த பதிவுகளில் பார்ப்போம். தொல் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப் பட்ட காலம் என ஆய்வாளர்கள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்ட காலம் பொ.யு.மு 500 முதல் பொ. யு. 300 வரை. பொருந்தல் என்ற இடத்தில் கிடைத்த எழுத்துப் பொறிப்புடன் உள்ள பானை ஓட்டின் காலம் பொ. யு. மு 500 என கணிக்கப் பட்டுள்ளது. எனவே தொல் தமிழ் அதற்கு முன்னதாக உருவானதாக எடுத்துக் கொள்ளலாம். தமிழகத்தில் இன்னும் பெரிய பரப்பளவுகளில் ஆய...

வரலாறு அறிவோம் - 1

வரலாறு அறிவோம் - 1 தொல்குடி குடிகள் குறித்த சான்றுகளை பெரும் கற்சின்னங்கள் மூலம் அறிகிறோம். சங்க இலக்கியங்கள் மூலமும் அறிகிறோம். குடி என்பதற்கு இல், திணை, குலம் ஆகியவை இணையான சொற்கள். சங்க இலக்கியத்தில் குடி என்ற சொல் குறிப்பிட்ட இரத்த உறவுகளை (பங்காளிகளை) குறித்தது. காலப்போக்கில் குடிகள் தங்கி இருந்த இடத்தை குறித்தது. சிறு சிறு குடிகளாக இருந்தவர்கள் ஆரம்ப காலங்களில் ஓரிடத்தில் தங்காமல் நாடோடியாகத் திரிந்து பின்னர் நிலையான இடங்களில் வாழத் தொடங்கினர். உணவு, உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபடத் தொடங்கினர். இரும்பை உருக்கி கருவிகள் செய்தனர். கலப்பை பயன்பாடு, தொழில் நுட்பங்கள் அறிமுகமாகின்றன. ஏரி, குளம் உருவாக்கம் பெறுகிறது. உணவு உற்பத்தி, கால்நடைகள் பெருக்கம், கருவிகள் உற்பத்தி அதிகரிக்கவும் பண்டமாற்று முறை உருவாகிறது. குடிக்குள்ளே ஆரம்பித்து பின்னர் வெவ்வேறு குடிகளுக்கிடையே பரிமாற்றம் தொடங்குகிறது. முதலில் வளங்களை பாதுகாப்பதன் மூலம் தலைவர்களாக ஆயினர். பின்னர் புதிய வளங்களை கைக் கொள்வதில் பூசலில் ஈடுபடத் தொடங்கினர். இதனாலேயே குறிப்பிட்ட காலம் வரை பூசலில் ஈடுபட வீரர்கள் வைக்கப் ...